The Life of Ram (From "96") - Pradeep Kumar & Govind Vasantha Lyrics


கரை வந்த பிறகே
பிடிக்குது கடலை
நரை வந்த பிறகேபுரியுது உலகைநேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே
இன்றை இப்போதே அர்த்தம் ஆக்குதே
இன்றின் இப்போதின் இன்பம் யாவுமேநாளை ஓர் அர்த்தம் காட்டுமே
வாழா என் வாழ்வை வாழவே
தாளாமல் மேலே போகிறேன்
தீர உள் ஊற்றை தீண்டவே
இன்றே இங்கே மீள்கிறேன்இங்கே இன்றே ஆள்கிறேன்
ஹே யாரோபோல் நான் என்னை பார்க்கிறேன்
ஏதும் இல்லாமலே
இயல்பாய்
சுடர் போல் தெளிவாய்
நானே இல்லாத ஆழத்தில் நான் வாழ்கிறேன்கண்ணாடியாய்
பிறந்தே
காண்கின்ற எல்லாமும் நான் ஆகிறேன்
இரு காலின் இடையிலே உரசும் பூனையாய்வாழ்க்கை போதும் அடடா
எதிர் காணும் யாவுமே
தீண்ட தூண்டும் அழகா
நானே நானாய் இருப்பேன்
நாளில் பூராய் வசிப்பேன்
போலே வாழ்ந்தே சலிக்கும் வாழ்வை மறைக்கிறேன்வாகாய் வாகாய் வாழ்கிறேன்
பாகாய் பாகாய் ஆகிறேன்
தோ காற்றோடு வல்லூரு தான் போகுதே
பாதை இல்லாமலே அழகாய்
நிகழே அதுவாய்
நீரின் ஆழத்தில் போகின்ற கல் போலவேஓசை எல்லாம் துறந்தே
காண்கின்ற காட்சிக்குள் நான் மூழ்கினேன்
திமிலேரி காளை மேல் தூங்கும் காகமாய்
பூமி மீது இருப்பேன்புவி போகும் போக்கில் கை கோர்த்து நானும் நடப்பேன்
ஏதோ
ஏகம் எழுதே
ஆஹா
ஆழம் தருதே
தாய் போல் வாழும் கணமே ஆரோ பாடுதேஆரோ ஆரிராரிரோ
ஆரோ ஆரிராரிரோ
கரை வந்த பிறகே
பிடிக்குது கடலைநரை வந்த பிறகே
புரியுது உலகை
நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே
இன்றை இப்போதே அர்த்தம் ஆக்குதேஇன்றின் இப்போதின் இன்பம் யாவுமே
நாளை ஓர் அர்த்தம் காட்டுமே
தானே தானே
னானே னே
தானே தானே னானே னே
தானே தானே னானே னே
தானே தானே னானே னே
தானே தானே
னானே னே
தானே தானே னானே னே
தானே தானே னானே னே
தானே தானே னானே னே
தானே

The Life of Ram (From "96") lyrics !!!

Related Pradeep Kumar & Govind Vasantha Lyrics